News September 21, 2024

பழனி கோயில் ஆக்கிரமிப்பு: நீதிபதி தலைமையில் குழு ஆய்வு

image

பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாத விநாயகர் கோவில், ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Similar News

News August 12, 2025

மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி அரிய வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வது புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழக இலக்கிய களம் நடத்தும் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. புகைப்படத்தின்(Soft Copy) மென் நகலை dikbookfair2025@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் புகைப்படங்களை ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

கீரனுார் அருகே செங்கல் சூளையில் மரணம் போலீசார் அறிக்கை!

image

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையச் சரகம் தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சேம்பரில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த மரணமானது மேற்படி இருவருக்கும் இடையே காதல் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மரணம் என்று விசாரணையில் தெரியவருகிறது.

News August 11, 2025

கீரனூர் அருகே கொலை சிறுமி உட்பட மூன்று பேர் கைது!

image

பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் தும்மலபட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணகுமார்(24) என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த சிறுமி, 19 வயது இளம்பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரை கீரனூர் ஆய்வாளர் தென்னரசன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!