News November 1, 2025
பழனி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தாழையூத்து அருகில் சாமிநாதபுரத்தில் இன்று(நவம்பர்.1) முன்னால் சென்ற லாரி திடீரென பிரக் பிடித்ததால் பின்னால் வந்த கார் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஒட்டி வந்த கமுதியைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து சாமிநாத புரம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 1) சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிக்னல் விதிகளை கடைபிடித்தல், ஜீப்ரா கிராசிங் பயன்படுத்தல், சாலையை கடக்கும் போது இருபுறமும் பார்வையிடுதல், ஓடாமல் பாதுகாப்பாக நடப்பது உள்ளிட்ட முக்கிய வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
News November 1, 2025
திண்டுக்கல் : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News November 1, 2025
அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கிராம சபை!

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது உடன் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.


