News December 15, 2024

பழனி அருகே முதியவர் கொலை: 3 பேர் கைது

image

பழனியை அடுத்த பாப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன்(70), அவரது மகள் பார்வதி(45). நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு-வை மாரியப்பன் அவதூறாக பேசியுள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் சின்னப் பொண்ணு, மருமகள் சுதா, மகன் மாசிலாமணி ஆகிய மூவரும் மாரியப்பனைத் தாக்கினா். மாசிலாமணி, மாரியப்பனை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Similar News

News August 18, 2025

திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

image

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 18, 2025

திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே SHARE பண்ணுங்க!

News August 18, 2025

BREAKING:திண்டுக்கல் அமைச்சர் வழக்கில் திருப்பம்

image

அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.18) உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!