News March 24, 2024
பழனியில் தேரோட்டம் வடம்பிடித்த பக்தர்கள்

பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ்!; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Similar News
News October 27, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை இன்று காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
திண்டுக்கல் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற அக்.27 மற்றும் 29 ஆகிய நாட்களில் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 26, 2025
திண்டுக்கல்: B.E / B.Tech டிகிரி போதும் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <


