News December 31, 2025

பழனியில் கோடி கணக்கில் மோசடி? பெண் அதிரடி கைது!

image

பழனி மற்றும் தாழையூத்தை சேர்ந்த ஆடிட்டர் முத்துநாராயணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் கலையரசி (43), ரஞ்சிதா (34) மற்றும் கவுதம் (34) ஆகிய மூவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகக் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மேலாளர் கலையரசியை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கோர்ட் அதிரடி!

image

பழனியில் 2023 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழனி ராசாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

News January 24, 2026

நிலக்கோட்டை அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள அழகம்பட்டியைச் சேர்ந்தவர் சின்ன முத்து (30). இவர் பஞ்சர் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு வேலையை முடித்துவிட்டு காமுபிள்ளை சத்திரத்திலிருந்து, அழகம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலை ஓர மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!