News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 20, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News October 20, 2025
திண்டுக்கல்லில் பூ மார்க்கெட் நிலவரம்!

திண்டுக்கல் சுற்றியுள்ள சிங்கம்பட்டி, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வீரக்கல், வண்ணம்பட்டி வடக்கம்பட்டி, ஆகிய இடங்களில் விளைச்சல் செய்யப்படுகிறது. இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்ட விற்பனை அவர்கள் அதிகமாக குவிந்தனா் இன்று பூக்கள் விலை அதிகமாக உள்ளது. மல்லி ரூபாய் 1200, சம்பங்கி 600, வாடாமல்லி 200, ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.
News October 20, 2025
திண்டுக்கல்: வெளியூர் போன தகவல் சொல்லிட்டு போங்க..!

திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. தனியாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அருகிலுள்ள 5 வீட்டுக்காரர்களின் நம்பர்களை வைத்திருக்க வேண்டும். அவசர நேரத்தில் வந்து உதவ தயாராக இருக்க வேண்டும். தீபாவளி விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி வெளியே செல்லும் முன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.