News January 7, 2025

பழநியில் கூடுதல் கைபேசி வைப்பு மையம் திறப்பு

image

பழநியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தின் தேவையை சமாளிக்கும் பொருட்டு,வடக்கு கிரிவீதியில் குடமுழுக்கு நினைவு அரங்கு எதிரில், கூடுதலாக புதிய கைபேசி வைப்பு மையம் இன்று காலை 11.30 மணியளவில் கோவில் நிர்வாக அதிகாரியால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு ரூ.5 கட்டணத்தில் பக்தர்கள் தங்களது கைபேசியை வைத்து கொள்ளலாம்.

Similar News

News August 19, 2025

திண்டுக்கல் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

image

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>(அ) அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம். உடனே SHARE!

News August 19, 2025

திண்டுக்கல்லில் இலவச பட்டா வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே.., ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!