News January 5, 2025
பழங்குடியின மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் போதக்காடு ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் நடந்து சென்று படித்து வருகின்றனர். இதனை அறிந்த தர்மபுரி ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள், நேற்று காலை பழங்குடியின மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அவர்களுக்கான வசதிகளை அமைத்து தர உறுதியளித்தனர்.
Similar News
News September 23, 2025
தருமபுரியில் புத்தகத் திருவிழா

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மதுராபாய் சுந்தர ராஜாராவ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்க உள்ளன.
News September 23, 2025
தருமபுரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தருமபுரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
தருமபுரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <