News September 3, 2025
பழங்குடியினருக்குப் பட்டா வழங்காததால் போராட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 15 பேருக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் 13 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள இரு பேருக்கு சாதிய உள்நோக்கத்தோடு வட்டாட்சியர் துறை செல்வம் பட்டா வழங்க மறுத்து வருகிறார் என கூறி பாதிக்கப்பட்டோர் இன்று(செப்.3) திண்டிவனம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக காத்திருந்தனர்.
Similar News
News September 10, 2025
விழுப்புரம்: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <
News September 10, 2025
அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா

விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(செப்.10) காலை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
News September 10, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.11) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ விஜய் மஹால், இளந்துறை
▶️ கிராம சேவை மைய கட்டிடம், எறையானூர்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கண்டம்பாக்கம்
▶️ அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வீரணாமூர்
▶️ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பாடிபள்ளம்
▶️ மனோன்மணி திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
பொதுமக்கள் நேரில் சென்று மனுகள் அளிக்கலாம்.