News October 25, 2024
பள்ளி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த தனுஸ்ரீ (14), பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News August 10, 2025
காவல்துறை சார்பாக போதைப்பொருட்கள் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் காவலர்கள் போதைப்பொருட்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 10, 2025
பல்லவர் கால கொற்றவை மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

திண்டிவனம் அடுத்த மொளசூரில் 5 அடி உயரமுள்ள பலகை கல்லில் செதுக்கப்பட்ட பல்லவர் கால 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பமும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் சுமார் 3அடி உயரம் உள்ள பலகை கல்லில் அமர்ந்த நிலையில் 9ம் நூற்றாண்டு சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்
News August 9, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.09) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.