News October 10, 2024

பள்ளி மாணவி தற்கொலை: உதயநிதி இரங்கல்

image

எடப்பாடியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு மருத்துவ கலந்தாய்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இதில் மனம் உடைந்த புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து Xதளத்தில், 7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பதிவிட்டுள்ளார்.

Similar News

News August 26, 2025

ஆக.27-ல் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாளை (ஆக.27) நடக்கவிருந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும், என்ற சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்று நாளை நடக்கவிருந்த விளையாட்டு போட்டிகள் வரும் ஆக.30-ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

News August 26, 2025

சேலம் மக்களுக்கு மாநகர காவல் துறை சிறப்பு பரிசு அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களுடைய நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் டேஷ் கேம் பொருத்தி அதனுடன் செல்பி போட்டோ எடுத்து, மாநகர காவல் துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பதிவிடுமாறும், முதலில் பதிவிடும் ஐந்து நபர்களுக்கு காவல் ஆணையரின் கைகளால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்க சேலத்தில் 54,157 பேர்!

image

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு சேலம் மாவட்டத்தில் பள்ளி பிரிவில் 35,996 பேரும்,கல்லூரி பிரிவில் 7,633 பேரும்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,165 பேரும்,அரசு ஊழியர்கள் பிரிவில் 1,625 பேரும், பொதுப்பிரிவில் 6,738 பேரும் என மொத்தம் 54,157 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

error: Content is protected !!