News March 6, 2025

பள்ளி மாணவியை வெட்டிய சித்தப்பா

image

பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.இவரது தம்பி சுரேஷ்பாபு.இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது.கடந்த 4ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News

News November 5, 2025

வேலூர்: நெடுந்தூர ஓட்டப்போட்டி – ஆட்சியர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 7401703483 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

வேலூர் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு

image

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க .ஸ்டாலின் இன்று (நவ.05 ) திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!