News September 12, 2025
பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளை பேருந்து மூலம் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் களப்பயணத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்விமோகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மூன்று பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News September 12, 2025
சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி. மீ சாலை

சென்னையுடன் செய்யாறு தொழிற்தட பகுதியை இணைக்கும் வகையில் 43 கி.மீ நீள நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் 33 கிராமங்களில் நிலம் கைப்பற்றப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 கிராமங்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 கிராமங்களும் அடங்கும்.
News September 12, 2025
காஞ்சிபுரம்: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <
News September 12, 2025
காஞ்சிபுரம்: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

காஞ்சிபுரம் மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். <