News April 25, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்

image

கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து நாளை மறுநாள் (ஏப்.,26) கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் ஆலோசனை முகாம் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 3, 2026

குளித்தலை அருகே வசமாக சிக்கிய தொழிலாளி!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் பாலமுருகன் (33). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் கஞ்சா வைத்திருந்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 560 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்

News January 3, 2026

கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

News January 3, 2026

கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!