News May 24, 2024
பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகம் வழங்க ஏற்பாடு

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்குத் தேவையான பாட புத்தகங்களை சரியாக பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News March 4, 2026
திருநெல்வேலி வரும் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அடுத்த நிகழ்ச்சியை மார்ச் இரண்டாவது வாரத்தில் நெல்லையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக வினர் தெரிவித்துள்ளனர்.
News March 4, 2026
நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
News March 4, 2026
நாங்குநேரி சம்பவத்தில் வெட்டுப்பட்டவருக்கு 5 மணி நேர ஆபரேஷன்

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கணேசன் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார். இவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். நெல்சனின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவருக்கு நேற்று 5 மணி நேரத்திற்கு மேல் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


