News January 8, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு 2024-2025 மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் வரும் 21ஆம் தேதி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 22ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஊட்டி அரசு கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
Similar News
News January 27, 2026
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
News January 26, 2026
தொட்டபெட்டா ஊராட்சியில் கிராம சபா: கலெக்டர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி அலுவலகம் ஆடாசோலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் மக்களின் மனுக்கள் குறித்த குறைகளை கேட்டு அறிந்து, விரைவில் மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
News January 26, 2026
நீலகிரியை சேர்ந்த 3 பேருக்கு அண்ணா விருது

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு அவர்களின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் பா. சுரேஷ், செ. செந்தில்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


