News October 18, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: ஆட்சியர்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. தற்போது, சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.

Similar News

News July 9, 2025

சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

image

சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 8, 2025

காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக திருநங்கை தேர்வு

image

இன்று ராயப்பேட்டை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வில், திருநங்கை சரண்யா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை இவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பொன்னாடை அணிவித்து சரண்யாவை வாழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News July 8, 2025

சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை

image

ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களைக் காட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் குறித்து சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தேசிய உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இன்று (ஜூலை 8) சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மக்கள் எந்த விதமான ஆபத்துகளில் சிக்காமல் இருக்க காவல்துறை எச்சரிக்கை.

error: Content is protected !!