News October 15, 2024
பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

சிவகங்கைமாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News May 8, 2025
ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
News May 7, 2025
சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க