News February 5, 2026
பள்ளி கட்டிடங்களை காணொளி வாயிலாக திறப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் நகரம், கிழக்கு பாண்டி ரோடு, B.N.தோப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் எம்.எல்.ஏ இரா.இலட்சுமணன் கலந்து கொண்டார். உடன் நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு மற்றும் நகராட்சி ஆணையர், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 7, 2026
விழுப்புரத்தில் இன்று மின் தடை!

மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(பிப்.7) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரு.வி.ரோடு, கந்தசாமி நகர், குருசாமி மின்னை தெரு, பழைய பேருந்து நிலையம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட 21 பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 7, 2026
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவதி!

விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு உத்தரவின் பேரில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்ப்பட்டது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News February 7, 2026
விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்; விக்கிரவாண்டி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(41). இவருக்கும் மனைவி சுபாஷினிக்கும்(34) இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த ராஜா, வீட்டின் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாவின் அண்ணன் அர்ச்சுணன் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


