News October 25, 2025
பள்ளிபாளையம் வருகை தரும் அன்புமணி ராமதாஸ்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள, ஆவத்தி பாளையம் கிராமத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அன்புமணி ராமதாஸ் வருகை தர உள்ளார் . அங்கு மஞ்சள் விவசாயத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ‘தமிழக மக்கள் உரிமை’ மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக நாளை வருகை தரும் அவருக்கு வரவேற்பு வழங்க கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்ட பக்தர்கள்

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்த புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தை மாத சனிக்கிழமையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டது . காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
News February 7, 2026
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணிகள் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது . பணிகள் 6 மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News February 7, 2026
நாமக்கலில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

நாமக்கல் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் நடத்தும் 2025-2026 நிதியாண்டுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள், வரும் பிப்.15- அன்று நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 5-8, 9-12, 13-16 என மூன்று வயது பிரிவினரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு: 0427 2386197, 63829 18902 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


