News February 4, 2026

பள்ளிபாளையம் அருகே துணிகர சம்பவம்!

image

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .இவருடைய மனைவி உமா ராணி. ஜெயபிரகாஷ் ஈரோடு மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில் உமாராணி இருசக்கர வாகனத்தில் வந்த போது ஓடப்பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் உமாராணி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News February 11, 2026

நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.25-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (பிப்.10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 10, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 10, 2026

BREAKING: நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!

image

நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் சங்கர்,விவசாயி ஒருவரிடம் சொத்துவரி விதிக்க ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மக்களே, உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 04286-281331 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!