News January 1, 2026
பள்ளிபாளையத்தில் அதிரடி முடிவு!

பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டிக்காரன் பாளையத்தில் கறிக்கோழி பண்ணையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக ஒரு கிலோவிற்கு ரூ.20-ம், நாட்டுக்கோழிக்கு ரூ.75-ம், காடைகளுக்கு ரூ.7-ம் வழங்க வேண்டும் இதனை ஏற்காத கறிக்கோழி நிறுவனங்களைக் கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பண்ணையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
Similar News
News January 22, 2026
நாமக்கல்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 22, 2026
நாமக்கல் மக்களே முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் (ம) திருச்செங்கோடு உதவி கலெக்டர்கள் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டம் நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு திருச் செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News January 22, 2026
நாமக்கல்: உணவில் தரம் இல்லையா ? இத பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


