News April 1, 2025

பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை: மகன் மாயம்

image

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பரணிதரன்(14), 9ம் வகுப்பு படித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தொண்டமாந்துறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பரணிதரன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை ராஜகோபால் கண்டித்ததனால் கோபித்துக் கொண்ட பரணிதரன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Similar News

News September 21, 2025

பெரம்பலூர்: 12th போதும் அரசு வேலை!

image

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ.38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அக்.6ம் தேதி கடைசி தேதியாகும். SHARE IT.

News September 21, 2025

பெரம்பலூரில் நாம்தமிழர் கட்சி சீமான் விமர்சனம்

image

தமிழ்நாட்டில் 50ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மற்றொரு மாற்று சித்தாந்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியுமே தவிர சினிமாவால் வீழ்த்த முடியாது, கூட்டத்தை பார்க்காதீர்கள் கொள்கையை பாருங்கள். தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு கூடும் மக்கள் கூட்டம் குறித்து பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

News September 21, 2025

பெரம்பலூரில் கல்வி கடன் வழங்கிய அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், நடத்தப்பட்ட கல்வி கடன் முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கலந்து கொண்டார்.

error: Content is protected !!