News January 21, 2026
பள்ளிகளுக்கு மீண்டும் 3 நாள்கள் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் குடியரசு தினமான ஜன.26 எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.
Similar News
News February 4, 2026
SHOCKING: சிறுமியின் வாயில் வெடித்த சாக்லேட்

ராஜஸ்தானில் சாக்லேட் என நினைத்து வெடிபொருளை சாப்பிட்ட 3 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடையில் வாங்கிய சாக்லேட் சாப்பிட்டபோது, அது வாயிலேயே வெடித்து சிதறியது. இதில் வாய் & தாடை பிளந்து காயமடைந்த சிறுமி ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். கடைக்காரர் சாக்லேட் வடிவிலான வெடிபொருளை சிறுமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News February 4, 2026
அரசியலில் புதிய புயலை கிளப்பும் சசிகலா

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சசிகலாவின் அடுத்த நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என <<19049108>>EPS <<>>கூறியிருந்தார். இதனையடுத்து, தனது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க சசிகலா முடிவெடுத்துள்ளார். புதிய அமைப்பு தொடங்குவதா அல்லது தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதா என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
News February 4, 2026
25 ஆண்டுகளுக்கு பிறகு.. தேதியை அறிவித்தது ECI

பேரவைத் தேர்தல் பிப்ரவரி 3-வது வாரத்தில் நடைபெறும் என முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி டெல்லி பாரத் மண்டபத்தில் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தமிழகம் உள்பட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.


