News December 13, 2024
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 23, 2025
தர்மபுரியில் நாளுக்கு நாள் வளரும் அதிசய லிங்கம்

தர்மபுரியில் அமானி மல்லாபுரத்தில் உள்ள சுயம்புலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு நடைபெறும் மாத சிவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் பிரதோஷ பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். கல்வி சிறக்க, திருமணத் தடை நீங்க மற்றும் ஜாதக தோஷங்கள் விலக பக்தர்கள் வழிபடும் முக்கிய இடமாக திகழ்கிறது. இந்த அதிசய கோயிலை பற்றி மற்றவருக்கும் பகிருங்கள்.
News September 23, 2025
தருமபுரி: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 23, 2025
தருமபுரியில் புத்தகத் திருவிழா

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மதுராபாய் சுந்தர ராஜாராவ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்க உள்ளன.