News April 8, 2025
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைடைய ரவுடி கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் (52) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
தோரணமலை சிறப்பு பூஜைக்கு வந்த நடிகர்கள்

தென்காசி மாவட்டம், கடையத்தில் உள்ள தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 27 நட்சத்திரங்களுக்கான பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (நவ.09) நடைபெறும் பூஜைக்கு நடிகர் கிங்காங் மற்றும் முத்துக்காளை ஆகியோர் கலந்து கொள்ள் வருகை தந்தனர். கொல்லம் ரயில் மூலம் புறபட்டு தென்காசி வந்தடைந்தனர்.
News November 9, 2025
தென்காசி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 9, 2025
BREAKING: தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று (நவ.9) லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னைக்கு வெளியே போறவங்க குடை எடுக்க மறக்காதீங்க. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


