News February 11, 2026
பல்லாவரம்: பாலியல் சீண்டல் வழக்கில் ஒருவர் கைது

பல்லாவரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஒரு காயலான் கடையில் வேலை செய்யும் நபருடன் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் அதிகமாகி, அந்த நபர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் தந்தை, பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அனகாபுத்துாரை சேர்ந்த டோனி (எ) மார்க்கஸ் (20) என்பவரை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 14, 2026
செங்கல்பட்டு: ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய கோவில்

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News February 14, 2026
JUST IN- செங்கல்பட்டில் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெயிண்டரான பிரதீபின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதால் இன்று தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு பிரதீப்பும் விஷம் அருந்தி உள்ளார். 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பிரதீப் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 14, 2026
செங்கை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


