News December 15, 2024
பல்லடத்தில் மாபெரும் கடையடைப்பு

சொத்து வரி உயர்வு, கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில், மாபெரும் கடையடைப்பு போராட்டம், வருகின்ற புதன்கிழமை (டிச.18) நடைபெற உள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.09) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News March 9, 2026
திருப்பூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த 690 மனுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 690 மனுக்களை அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


