News April 27, 2024

பலாபழம் எடுத்த சென்ற காட்டு யானை

image

கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு (ஏப். 26) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையோர பலாப்பழம் கடையிலிருந்து காட்டு யானை ஒன்று பழத்தை எடுத்து செல்வதை கண்டனர். உடனே போலீஸ் வாகனம் சைரன் ஒலிக்க செய்து யானையை விரட்டினார்கள். வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.

Similar News

News March 3, 2026

நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் தலைமை தபால் நிலையத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் (E-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News March 3, 2026

குன்னூர் மக்களுக்கு வந்த சோதனை!

image

குன்னூர் வண்டிப்பேட்டை அம்மா உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதானதால், காலை உணவாக இட்லி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் சேதமடைந்தும், உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளதாலும் பொங்கல் மற்றும் கலவை சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் வருகை குறைந்துள்ள நிலையில், இயந்திரத்தைச் சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 3, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச் 2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!