News February 28, 2026
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் உள்ள 349 வாகனங்களை பகிரங்க ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கரணையில் மார்ச் 4ம் தேதி, சேலையூரில் மார்ச் 6ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும். பள்ளிக்கரணையில் மார்ச் 2ம் தேதி, சேலையூரில் மார்ச் 4ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News March 7, 2026
செங்கல்பட்டு ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

செங்கல்பட்டு மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967(அ)1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!
News March 7, 2026
செங்கல்பட்டு: இன்று என்ன பேச போகிறார் விஜய்?

செங்கல்பட்டு: மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இன்று நடைபெறும் மகளிர் தினவிழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். தனியார் நச்சத்திர ஓட்டலில் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில், மகளிர் மத்தியில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News March 7, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று தனது பைக்கில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.


