News March 24, 2024
பறக்கும் படையினருடன் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.23) நடைபெற்றது. இதில் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Similar News
News February 12, 2026
கோவை அருகே பயங்கர விபத்து! ஒருவர் பலி

சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் பரத்ராஜ். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய நண்பர் ஆதித்யா, தோழி சங்கீதா ஆகியோர் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பரத்ராஜ் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.


