News April 13, 2024
பறக்கும் படையினரிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி இன்று சாத்தான்குளத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்பொழுது பெரியதாழை அருகே வைத்து அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை இட்டனர். சோதனை முடிந்ததும் பறக்கும் படை அதிகாரிகளிடம் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
Similar News
News December 18, 2025
தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் டிச.20 தேதி முதல் 23ஆம் தேதி வரை தூத்துக்குடி வரும் அனைத்து ரயில்களும் மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவில்பட்டி, மணியாச்சியில் இருந்து இந்த நாட்களில் தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 18, 2025
தூத்துக்குடி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 7 ஆண்டுகள் சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் இவரை கைது செய்தனர். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


