News March 30, 2025

பரிசலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

image

ஊத்துபள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் லட்சுமி தம்பதிகள் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை வழக்கம் போல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடித்த போது நிலை தடுமாறி லட்சுமி ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற தங்கராஜ் ஆற்றல் குதித்தார் இருப்பினும் லட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 5, 2025

தர்மபுரி பாஜகவில் ஆட்சேர்ப்புகாக நிர்வாகிகள் நியமனம்

image

தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் மாற்றுக்கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் பொதுமக்கள், மற்றும் VVIP-க்களை கட்சியில் இணைக்கும் பணிகளை செய்வதற்காக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காரிமங்கலம் கிழக்கு-ராமகிருஷ்ணன், காரிமங்கலம்- மேற்கு சரவணன், பாலக்கோடு நகர்- பெரியசாமி, பாலக்கோடு கிழக்கு- பசுபதி, பாலக்கோடு மேற்கு- முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 5, 2025

தருமபுரி மாவட்டத்தில் 114 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 05 அங்கன்வாடி பணியாளர், 20 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 89 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே Click செய்து <<>> விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார். *நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிறாதீங்க. ஆதரவற்ற, பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும்*

News April 5, 2025

தர்மபுரி மின் நுகர்வோர் மறந்துவிடாதீர்

image

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் இணைப்புகளின் மின் கணக்கீடு சம்பந்தமான குறைபாடுகள், குறைந்த மின் அழுத்தம் புகார்கள் மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் மாற்றுதல் தொடர்பாக புகார் இருப்பினும் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு முகாம் ஏப்ரல் 5 தர்மபுரி கோட்ட அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று செயற்பொறியாளர் தெரிவித்தனர்.

error: Content is protected !!