News November 19, 2024
பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தம்

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு, பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.20, 21) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அந்நேரங்களில், வள்ளுவர் கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
Similar News
News September 9, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 9, 2025
சென்னையில் இடியுடன் மழை வெளுக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 9, 2025
விஜயகாந்தின் சகோதரி காலமானார்!

தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின், சகோதரி மருத்துவர் விஜயலட்சுமி (78). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்.09) காலமானார். அவரது இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு விஜயகாந்த் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.