News December 26, 2025
‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டதா?

‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டதாக உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். மொழிப்போரை மையமாக கொண்டு தான் எழுதிய ‘செம்மொழி’ என்ற கதையை திருடி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News January 27, 2026
FLASH: Ex இந்திய கிரிக்கெட் வீரர் கைது

Ex இந்திய வீரர் ஜேக்கப் மார்டின் கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. வதோதராவில், மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அவர் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதுபற்றி வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரேஷ் டிரைவிங், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
சனாதனத்தை புறக்கணிக்கும் அரசு ஆட்சிக்கு வராது: அமித்ஷா

சனாதான தர்மத்தை புறக்கணிக்கும் அரசு ஆட்சிக்கு வராது என்று நம்புவதாக அமித்ஷா பேசியுள்ளார். குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முத்தலாக் ஒழிப்பு போன்ற பாஜக அரசின் முக்கிய முடிவுகள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கிறது. எனவே, சனாதன தர்மத்தின் மதிப்புகளை பாதுகாக்க வேண்டும். எனவே, இதனை புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்று கூறியுள்ளார்.
News January 27, 2026
PM மோடிக்கு SP வேலுமணி வாழ்த்து

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே FTA ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு, PM மோடி மற்றும் பியூஷ் கோயலுக்கு SP வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தமானது இந்தியத் தொழில்துறைக்கு வலுவூட்டும் என தனது X பதிவில் கூறியுள்ளார். இதனால், ‘தென்னகத்தின் மான்செஸ்டர்’ என்றழைக்கப்படும் கோவை மற்றும் திருப்பூர் உலகளாவிய வளர்ச்சிக்கும், தொழில் செய்வது எளிதாக்குவதற்கும் வழிவகுக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


