News October 29, 2025
பரமக்குடி: நீரில் மூழ்கி ஒருவர் பலி

போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ். கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (70). ஜோதிடர். பாலசுப்பிரமணியன் எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இதனிடையே, பாலசுப்பிரமணியன் அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது கண்மாய் நீரில் தவறி விழுந்த அவர் (அக்.27) மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 29, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளில் நவ. 1 காலை 11 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரகப் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
ராமேஸ்வரம் – ராமநாதபுரம் ரயில் சேவை நிறுத்தம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் – இராமநாதபுரம் இடையே உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடைப்பெறும் காரணத்தினால் இன்று, அதிகாலை 6:50 மற்றும் காலை 11:40 மணி அளவில் இருந்து இயக்கப்படும் தினசரி ரயில்கள் நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை வரை இராமநாதபுரம் வழித்தட தண்டவாளத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. SHARE
News October 29, 2025
இராமநாதபுரம்: போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் 29, 30 ஆகிய தேதிகளில் உ.முத்துராமலிங்கத் தேவர் 63வது குருபூஜை விழா,118 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர் எஸ் மங்கலம், சருகனி, சிவகங்கை வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும். *ஷேர் பண்ணுங்க


