News December 24, 2025
பரமக்குடி: அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

பரமக்குடி அருகே எஸ். அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாம்பு விழுந்தான் கிராமத்தில் குடியிருக்கும் பெண்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதை ஊராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி காலனி,அண்டக்குடி, மீனம்குடி குளவி பட்டி, நண்டு பட்டி ஆகிய கிராமங்களுக்கு மற்றும் வேலை வழங்குவதாக குற்றச்சாட்டு.
Similar News
News December 27, 2025
இராம்நாடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
இராம்நாடு: புத்தாண்டு முதல் புதிய நேரத்தில் ரயில்

இராமேஸ்வரம் – சென்னை சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டி எண்: 22662 புத்தாண்டை முன்னிட்டு புதிய நேரத்தில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும். நேரம் பின்வருமாறு 09:10 PM இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இராமநாதபுரம்,பரமக்குடி, காரைக்குடி, திருச்சி,செங்கல்பட்டு வழியாக சென்னை சென்றடையும். குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து சேது ரயில் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.
News December 27, 2025
இராமநாதபுரம்: ரேஷன் கார்ட் இருக்கா…டிச.31 கடைசி

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க


