News March 20, 2025

பரமக்குடியில் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

image

பரமக்குடி தாலுகா, சின்ன நாகாச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு முதியோர் பிப்ரவரி முதல் உதவி தொகை பெற்று வருகிறார். இதை பெறுவதற்கு தான் பரிந்துரைத்ததாக கூறி சின்ன நாகாச்சி வருவாய் கிராம உதவியாளர் அம்பேத் ராணி புகார்தாரரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பேத் ராணியை ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 20, 2025

இராமநாதபுரத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

காற்று வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக இராம்நாடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகாலை, மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது என இராம்நாடு காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

புத்தக திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 வது புத்தகக் கண்காட்சி நாளை முதல் மார்ச் 30 வரை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது. காலை 10 முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். *ஷேர் பண்ணுங்க 

News March 20, 2025

இராம்நாதபுரம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி – கலெக்டர் தகவல்

image

டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச்.25 முதல் வார நாட்களில் காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் தங்கள் புகைப்படம், சுய விவரங்களுடன் 04567-230160 என்ற எண் (அ) 73394 06320 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்

error: Content is protected !!