News October 10, 2025

பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

image

பரமக்குடி வட்டம், பாம்பூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (42) இராமநாதபுரம் – மதுரை நெடுஞ்சாலையில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி (அக்.08) உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக அரசு மேய்ச்சல்காரர்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களையும் அதிகபட்ச இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

Similar News

News December 9, 2025

ராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News December 9, 2025

ராமநாதபுரம்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

கீழக்கரை விபத்தில் மேலும் ஒருவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையம் பகுதியில் கடந்த டிச.06 அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அதில் காயமடைந்த கீழக்கரை அலவாய்கரவாடியை சேர்ந்த மாதேஸ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!