News January 20, 2026

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் மற்றும் நாய் பலி

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகவள்ளி (50). நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது வயலில் அறுந்து மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த நாயும் மின்கம்பியில் சிக்கி இறந்தது. தகவலறிந்த பரமக்குடி போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 31, 2026

இராம்நாடு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

ராம்நாடு மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டைநகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே<> கிளிக் <<>>செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 31, 2026

ராம்நாடு: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

ராமநாதபுரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News January 31, 2026

ராம்நாடு: 11.53 வினாடி வேகம்.. இளைஞருக்கு குவிந்த பாராட்டு!

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 100 மீ. ஓட்டப்போட்டியை 11.53 வினாடிகளில் முடித்த முகேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று (ஜன.30) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!