News December 15, 2025
பரமக்குடியில் பேருந்திற்கு அடியில் சிக்கிய மாடு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் இன்று இரவு (எண்:19) நகர் பேருந்தின் பின்பக்கத்தில் மாடு சிக்கி கொண்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மாட்டை மீட்க முடியாமல் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராடினர். பின் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டனர்.
Similar News
News December 19, 2025
ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.24 ( புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 19, 2025
ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும் அதற்குப் பதிலாக 10.01.2026 அன்று சனிக்கிழமையினை பணி நாளாக அறிவித்தும் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.


