News May 19, 2024
பரமக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம், பரமக்குடியில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய தினம் வைகாசி அட்சய முகூர்த்தம் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம், சந்தை கடை, ஆர்ச் போன்ற பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது.
Similar News
News September 13, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (செப்.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News September 12, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய முகாம் விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.13) நடைபெறுகிறது. மண்டபம் வட்டாரம் – மானங்குடி, பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.
News September 12, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.