News May 11, 2024

பரமக்குடியில் இடிதாக்கி ஒருவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று பெய்த கனமழையின் பொழுது கமுதக்குடி அருகே உள்ள சுந்தனந்தல் விளக்கு பகுதியில் சத்யராஜ் என்பவர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இடி மின்னல் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

ராமநாதபுரம்: வீணாகிய ரூ.57 கோடி திட்டம்

image

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். தீர்த்தம் அருகே விடுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதை விர்க்க 2021ல் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து 2 மாதங்களுக்கு முன்பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் நேற்று மீண்டும்அக்னி தீர்த்த கடலில் திடக்கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகியது.

News September 13, 2025

செப்டம்பர் 15 – முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைத்து பேரூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரையும் அண்ணா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

News September 13, 2025

ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் ஆடி புரட்டாசி மற்றும் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர். எனவே, செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட இருப்பதால் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!