News September 16, 2024

பரனூர் சுங்கசாவடியில் 3 பூத் கண்ணாடி உடைப்பு

image

பரனூர் சுங்கசாவடியில், இன்று 500க்கும் மேற்பட்ட மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சுங்க கட்டணத்தை திரும்ப பெற கோரி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அங்குள்ள 3 பூத் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். கண்ணாடி உடைத்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதனால், பரனூர் சுங்கசாவடியில் பதற்றம் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News August 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 18, 2025

மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

image

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

News August 18, 2025

செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <>இந்த UIDA <<>>என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Retrieve Aadhaar என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் நம்பர் மற்றும் captcha, OTP எண்ணை பதிவிட்டு மீட்டெடுக்கலாம்.1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!