News October 13, 2024
பரந்தூரில் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கின

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சியில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கரில் அமைய உள்ளது. இதனால் அங்கு உள்ள மக்கள் மறுகுடியமர்வு செய்ய, இடம், பெயர் எனத் தேர்வு செய்யப்பட்ட 1,005 குடும்பத்தினரிடம், கல்வி, வேலை, படிப்பு உள்ளிட்ட விபரங்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 21, 2025
காஞ்சிபுரம்: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

காஞ்சி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News August 21, 2025
காஞ்சிபுரம் வரும் இபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம் நேற்று (ஆக.20) செய்தி குறிப்பை நேற்று வெளியிட்டார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஆக.21) காஞ்சிபுரம் வருகை தந்து விவசாயிகள், நெசவாளர்கள் சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து மாலை குமரக்கோட்டம் முருகன் கோவில் அருகில் பொதுகூட்டத்தில் பேசுகிறார். மேலும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

காஞ்சிபுரம் மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது இன்று நடக்கும் <