News March 29, 2024
பயிற்சி பெற்ற வேளாண் மாணவிகள்!

நாமகிரிப்பேட்டை, மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள இவென் மோர் புட்ஸில் சிறுதானியங்களை பதப்படுத்தி பல்வேறு விதமான மதிப்பு கூட்டு பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி கிராமப்புற அனுபவ பயிற்சி மாணவிகளுக்கு உரிமையாளர் ஜனகன் செயல் விளக்கம் அளித்தார்.
Similar News
News February 8, 2026
நாமக்கல்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
நாமக்கல்: தொழிலாளி அடித்துக் கொலை – 5 பேர் கைது

நல்லூர் அருகே முறையற்ற உறவு விவகாரத்தில் ரத்தினம் (52) என்ற தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். ராஜேஸ்வரி என்பவருடன் ரத்தினத்திற்கு இருந்த பழக்கத்தை அவர் குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். கடந்த 5-ம் தேதி அங்கு சென்ற ரத்தினத்தை, ராஜேஸ்வரியின் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து கட்டிப்போட்டுத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஒருவரைத் தேடி வருகின்றனர்.
News February 8, 2026
ப.வேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே அனிச்சம்பாளையம் பிரிவு சாலையில் நேற்று மதியம் டூவீலரில் சென்ற கோகுல் (19) என்ற கூலித்தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். விபத்தின்போது தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


