News December 20, 2024
பயிர் காப்பீடு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சியில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள்,2024-2025ம் ஆண்டுக்கு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்காய பயிருக்கு ரூ.2062.46ம், வற்றல் மிளகாய்க்கு ரூ.1220.18ம், வாழைக்கு ரூ. 3460.48-ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1632.68ம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியில், குடும்பப் பிரச்சனை காரணமாக லாவண்யா (26) என்ற பெண்ணை அவரது கணவர் பொன்னர் (29) அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்கள் சரண்யா மற்றும் கன்னியம்மாள் ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொட்டியம் போலீசார், பொன்னாரை கைது செய்தனர்.
News March 3, 2026
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த பிறகு தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 717 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு, தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை மனுக்கள் என 717 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


