News August 24, 2024
பயிர் காப்பீடு திட்டத்தில் 72 கோடி விடுவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டுக்கான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூபாய் 58.56 கோடியும், பாசிப்பயிருக்கு ரூபாய் 14.161 கோடியும் மொத்தம் ரூபாய் 72.721கோடி என 35,607 விவசாயிகளுக்கு இப்போ -டோக்கியோ காப்பீடு நிறுவனம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரின் நேற்றைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.
News March 2, 2026
BREAKING சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு விசாரணைக்காக காவல் துறையால் அழைத்துச் சென்ற போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுக்கு மேலாக நடக்கு இந்தவழக்கில் மார்ச்.23 அன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்க உள்ளார்.
News March 2, 2026
தூத்துக்குடி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

தூத்துக்குடி மக்களே, இங்கு <


