News June 15, 2024

பயன்பாட்டில் இல்லாத புகார் எண்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வசதிக்காக எண் 77900-19008, 04633- 215000 என்ற வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த எண்கள் கடந்த 2 மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அவசர தேவைக்கு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்

Similar News

News August 27, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News August 27, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து இன்று பொதுமக்கள் அனைவருக்கும் “தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துக்களை காக்கி உடைய அணிந்த விநாயகர் படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

News August 27, 2025

தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!