News March 30, 2026
பயத்தால் தான் விஜய் 2 தொகுதியில் நிற்கிறார்: சுப. வீ

வரும் தேர்தலில் இருமுனை போட்டிதான் என சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். இது திமுகவுக்கும், NDA-க்கும், சுயமரியாதைக்கும் அடிமை தனத்துக்குமான போட்டி என்ற அவர், தவெகவை கணக்கில் எடுக்க வேண்டாம் என்றார். மேலும், விஜய்யே பயத்தால்தான் 2 தொகுதியில் நிற்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் உள்பட அமைச்சர் ரகுபதி, திருச்சி வேட்பாளர் இனிகோவும் இதே கருத்தை கூறியுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 6, 2026
சமூகநீதி பேசுவதற்கு மட்டும் அல்ல: மாணிக்கம் தாகூர்

மதுரை மேலூர் பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த Ex MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, சமூகநீதி பேசுவது மட்டும் அல்ல.. வாய்ப்பு கொடுப்பதில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் அதை நிரூபித்து உள்ளது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸை பாராட்டுகிறாரா அல்லது திமுகவை சாடியுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News April 6, 2026
ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கும் காந்தி!

ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளராக தானே மீண்டும் போட்டியிடுவதாக அமைச்சர் காந்தி உறுதிபடுத்தியுள்ளார். தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தன்னை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துவிட்டதாகவும், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் காந்தி கூறியுள்ளார். முன்னதாக காந்தியின் மகன் வினோத் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
News April 6, 2026
உங்க போன் இப்படி ஆச்சுனா… உஷார் மக்களே

இன்றைய சூழலில், யாருடைய போனையும் ஈசியாக ஹேக் செய்து விடலாம் என்ற நிலை உள்ளது. உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த Signs மூலம் தெரிஞ்சிக்கலாம் ➤போன் பேசும் போது, அசாதாரண ஒலிகள் கேட்கும் ➤ஆப்கள் தானே அடிக்கடி ஓபன் ஆகும் ➤போனில் ஏற்கெனவே யூஸ் பண்ண இணையதளங்கள், தற்போது ஓபன் போதும் வித்தியாசமாக தெரியும் ➤யூஸில் இல்லாத போதும் பேட்டரி சூடாகும் ➤போன் ஆப் ஆவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும்.


